Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மளிகை சாமான் வாங்கவே யோசனை பண்ண வேண்டி யிருக்கு.. துபாயில் வசிக்கும் ப்ரபல தமிழ் நடிகை கவலை!
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக, மளிகை சாமான்கள் வாங்குவதற்கே நீண்ட யோசனை செய்ய வேண்டி இருக்கிறது என்று துபாயில் வசிக்கும் பிரபல தமிழ் நடிகை தெரிவித்துள்ளார்.
சிம்புவின், சரவணா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், இந்தி நடிகை மேக்னா நாயுடு.
பிரசாந்துடன் ஜாம்பவான், சரத்குமாருடன் வைத்தீஸ்வரன், டி.ராஜேந்தரின் வீராசாமி, சுந்தர்.சியின் வாடா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கவுண்டமணி சார் பொண்ணு தீவிர சி.எஸ்.கே ரசிகை.. கிரிக்கெட்டையும் தாண்டிய பத்ரிநாத்தின் பேட்டி!
டென்னிஸ் வீரர்
கார்த்தியின் சிறுத்தை உட்பட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, யோகிபாபுவின் தர்மபிரபு படத்தில் நடித்திருந்தார். இவர், போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகியல் ரீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கொரோனா லாக்டவுன்
தற்போது இருவரும் துபாயில் வசித்து வருகின்றனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தாலும் வெளியே வர மக்கள் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார், நடிகை மேக்னா. அவர் கூறியிருப்பதாவது: இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முழுமையான லாக்டவுன் போல்தான் இருக்கிறது.
மளிகை சாமான்கள்
மக்கள் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள். சமூக விலகலை சரியாகக் கடைபிடிக்கிறார்கள். கையுறைகளை அணிந்திருக்கிறார்கள். லாக்டவுனுக்கு முன் வீட்டை விட்டு வெளியேற நாம் தயங்கியதில்லை. ஆனால், இப்போது மளிகை சாமான்கள் வாங்குவதற்கே நீண்ட யோசனை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அதிக நேரம், வெளியே இருக்க விரும்பவில்லை.
கவலை இல்லாமல்
வாழ்க்கை நிச்சயமற்றதாக இருப்பதால், வெளியே அலைவது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், எல்லோரும் மாஸ்க் மற்றும் குளோஸ் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. இனி, இது பழக்கமாகமே மாறிவிடும். இதற்கு முன் மக்கள் எங்கும் கவலையில்லாமல் சுதந்திரமாகச் சென்று வந்தார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல.
Recommended Video
தயாராக இருங்கள்
எல்லோரும் பயத்துடனும் கவலையுடனும் இருக்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டோம். வெளியில் சுற்றுவது சவுகரியமானது அல்ல என்பதை உணருங்கள். இந்த கடினமான யதார்த்தத்தையும் கொரோனா வைரஸின் வலிமையையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களையும் உங்கள் அருகில் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க மனதளவில் தயாராக இருங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.