Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முத்தக்காட்சியை நீக்கிய பிறகு யு பெற்ற மேல் நாட்டு மருமகன்!
சென்சார் பற்றிய புலம்பல்கள் கோடம்பாக்கத்தில் ரொம்பவே கேட்க ஆரம்பித்துவிட்டன. முத்தக் காட்சி இருந்தால் கூட இனி ஏ தான் என்று சென்சார் கெடுபிடி காட்டுவதால், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டியுள்ளதாம்.
சமீபத்தில் அப்படி சென்சாரில் மாட்டிய படம் மேல் நாட்டு மருமகன்.
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயா என்னும் வெள்ளைக்காரப் பெண் நாயகியாக அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் எம்.எஸ்.எஸ் இந்தப் படம் மற்றும் சென்சார் பற்றிக் கூறுகையில், "ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.
படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது. சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டோம். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு வசனத்தையும், நாயகன், நாயகி நடித்த முத்தக்காட்சியையும் நீக்கினால்தான் யூ சான்றிதழ் கொடுப்போம் என்று கூறினார்கள். நானும் முத்தக்காட்சியை நீக்குகிறேன் என்று கூறிவிட்டேன். அந்த வசனத்தை நீக்கி வேறொரு வசனத்தைக் குறிப்பிட்டேன். அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, யூ சான்றிதழ் வழங்கினார்கள்," என்றார்.