Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சோனா மீது கேஸ் போட்டார்கள் ஆண்கள் நலச் சங்கத்தினர்
சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கையில் வெளியான சோனாவின் பேட்டி பெரும் புயலைக் கிளப்பி விட்டது. அதில் ஆண்களை டிஷூ பேப்பருடன் சோனா ஒப்பிட்டுக் கூறியதாக வெளியாகியிருந்ததால் ஆண்கள் நலச் சங்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். சோனா வீடு முன்பு போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்றும் அந்தப் பத்திரிகைதான் திரித்து போட்டு விட்டதாகவும் கூறினார் சோனா. மன்னிப்பும் கேட்க மறுத்து விட்டார்.
இந்தப் பின்னணியில், ஆண்கள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் மதுசூதனன் என்பவர் சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நடிகை சோனா ஆண்களைப் பற்றி தெரிவித்துள்ள கருத்து அவதூறானது. ஆண்களின் சுயமரியாதைக்கு எதிரானது. பண்பாடு மிக்க சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் பேசி உள்ளார். குடும்ப வாழ்க்கையை பற்றியும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
சுயமரியாதைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நடிகை சோனா மீது சட்டப்பிரிவுகள் 500, 504, 505 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஏற்கனவே சோனா மீது வேறு ஒரு ஊரிலும் வழக்குப் போட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.