Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சோனா மீது கேஸ் போட்டார்கள் ஆண்கள் நலச் சங்கத்தினர்
சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கையில் வெளியான சோனாவின் பேட்டி பெரும் புயலைக் கிளப்பி விட்டது. அதில் ஆண்களை டிஷூ பேப்பருடன் சோனா ஒப்பிட்டுக் கூறியதாக வெளியாகியிருந்ததால் ஆண்கள் நலச் சங்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். சோனா வீடு முன்பு போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்றும் அந்தப் பத்திரிகைதான் திரித்து போட்டு விட்டதாகவும் கூறினார் சோனா. மன்னிப்பும் கேட்க மறுத்து விட்டார்.
இந்தப் பின்னணியில், ஆண்கள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் மதுசூதனன் என்பவர் சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நடிகை சோனா ஆண்களைப் பற்றி தெரிவித்துள்ள கருத்து அவதூறானது. ஆண்களின் சுயமரியாதைக்கு எதிரானது. பண்பாடு மிக்க சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் பேசி உள்ளார். குடும்ப வாழ்க்கையை பற்றியும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
சுயமரியாதைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நடிகை சோனா மீது சட்டப்பிரிவுகள் 500, 504, 505 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஏற்கனவே சோனா மீது வேறு ஒரு ஊரிலும் வழக்குப் போட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.