விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி! சிறந்த ஆசிய திரைப்படங்களில் ஒன்றாக மெர்சல் தேர்வு!
சிறந்த ஆசிய திரைப்படங்களில் ஒன்றாக புச்சியான் பட விழாவில் மெர்சல் திரையிடப்பட்டது.
சென்னை: சிறந்த ஆசிய திரைப்படங்களில் ஒன்றாக மெர்சல் திரைப்படம் புச்சியான் இண்டர்னேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 22ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஐஏஆர்ஏ விருது வழங்கும் விழாவிற்கு மெர்சல் திரைப்படத்தின் நடித்ததற்காக நடிகர் விஜய் பெயர் தேர்வாகியுள்ளது தெரிந்த விஷயம்.

இப்போது ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்ட செய்தி வந்துள்ளது. தென்கொரியாவின் புச்சியான் நகரில், புச்சியான் அகில உலக திரைப்படத் திருவிழா நடைபெற்றது.
அதில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டது. சிறந்த ஆசிய திரைப்படங்களில் மெர்சல் திரைப்படமும் ஒன்று என பாராட்டுக்களைப் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரைப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத் தலைவர் ஹேமா ருக்மணி. மேலும் இத்தகவலை அவர் ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மெர்சல் பற்றிய இந்த செய்தி விஜய் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











