தொடரும் மெர்சல் அட்ராசிட்டி - பிரபல தியேட்டர் ட்வீட்!
சென்னை : விஜய்யின் 'மெர்சல்' படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கும் மேல் வசூலித்து பல நடிகர்களின் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.
தற்போது தெலுங்கில் வெளியான 'அத்ரிந்தி' படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வேறொரு புரட்சியை மெர்சல் செய்யும் என ரசிகர்கள் ஆவலாகக் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோஹினியில் நான்காவது வாரத்திலும் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாம். இந்தத் தகவலை திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நான்காவது வாரத்திலும் தொடரும் மெர்சல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் ரசிகர்கள் உற்சாகமாகி வருகிறார்கள். மெர்சல் படம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











