Don't Miss!
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
4 சீன்களை நீக்க மெர்சல் டீம் முடிவு?
மெர்சல் படத்திலிருந்து 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: பாஜகவினரின் மிரட்டல் தொடர்ந்து வருவதால், மெர்சல் படத்திலிருந்து 4 காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவத்தை வியாபாரமாக செய்பவர்கலுக்கும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பரிவர்த்தனைக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பும், மிரட்டலும் விடுத்து வருகின்றனர். வருமான வரி ரெய்டு உள்ளிட்டவை வரலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதையடுத்து எதுக்கு வம்பு என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் தரப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பும் படக்குழுவும் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டன.
அப்போது படத்தில் மருத்துவம், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை தொடர்பான காட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வரும் 23 அல்லது 24-ஆம் தேதியில் தணிக்கை குழுவிடம் கடிதம் கொடுத்து பின்னர் நீக்கப்படும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இல்லாததால் அவற்றை நீக்க தேவையில்லை என்று தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் தரப்பு இவ்வாறு முடிவு எடுத்துள்ளது ரசிகர்களை பெரும் வருத்தமடைய வைத்துள்ளது.