Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2018ல் இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் எது தெரியுமா?
சென்னை: 2018ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட அட்வகேசி ஹேஷ்டேக்(advocacy hashtag) #MeToo தான்.
2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டு பாலிவுட்டை மட்டும் அல்ல பல துறைகளையும் அதிர வைத்தது மீ டூ இயக்கம். அட இந்த ஆளா இப்படி செய்தார் என்று வியக்கும்படி சில பிரபலங்கள் கூட சிக்கினார்கள்.
பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினார்கள்.
சமூக வலைதளம்
பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்தவர்களும் #MeToo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட அட்வகேசி ஹேஷ்டேக்(advocacy hashtag) எதுவென்று பார்த்தால் அது #MeToo தான்.
ஹேஷ்டேக்
2018ம் ஆண்டு 1.5 மில்லியன் முறை #MeToo என்ற ஹேஷ்டேக்கை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தியுள்ளனர். #timesup என்ற ஹேஷ்டேக் 5 லட்சத்து 97 ஆயிரம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து #marchforourlives என்ற ஹேஷ்டேக் 5 லட்சத்து 62 ஆயிரம் முறை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள்
இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் என்றால் அது #love. அதன் பிறகு #instagood, #fashion ஆகிய ஹேஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. #lovequotes என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.
பயம்
#MeToo என்று கூறி பாலியல் புகார் தெரிவித்த பெண்களின் தைரியத்தை பலர் பாராட்டியுள்ளனர். ஆனால் அப்படி புகார் தெரிவித்த பிறகு தங்களின் கெரியர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். இதை பார்த்துவிட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து வெளியே சொல்ல பயப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.