Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சென்சார் போர்டு தலைவரைக் கலாய்த்த 'மெட்ரோ' இயக்குநர்!
சென்னை : தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த நிஹலானி அந்தப் பதவியில் இருந்து விலகிய பிறகு வினியோகஸ்தராகி தற்போது ராய் லக்ஷ்மி நடித்துள்ள ஜூலி 2 என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது . வெளிவருவதற்கு முன்பே பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'மெட்ரோ'. படத்திற்கு தணிக்கைத் துறை தடை விதித்த பிறகு போராடித் தான் சான்றிதழ் பெற்றனர்.
செயின் திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பற்றிய இந்தப் படத்திற்கு வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டு டிவியில் ஒளிபரப்ப இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, ஜூலி 2 படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த நிலையில் 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் அனந்தகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில் நையாண்டியாகவும், கோபமாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
'ஜுலி 2' போன்ற ஒரு குடும்பப் படத்தை வெளியிடும் நபர் என் படத்தின் தொலைக்காட்சி உரிமைச் சான்றிதழ் தொடர்பாக பல முறை இ-மெயிலில் தொடர்புகொண்டும் எனக்கு எந்த பதிலும் தரவில்லை' என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.