Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்சார் போர்டு தலைவரைக் கலாய்த்த 'மெட்ரோ' இயக்குநர்!
சென்னை : தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த நிஹலானி அந்தப் பதவியில் இருந்து விலகிய பிறகு வினியோகஸ்தராகி தற்போது ராய் லக்ஷ்மி நடித்துள்ள ஜூலி 2 என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது . வெளிவருவதற்கு முன்பே பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'மெட்ரோ'. படத்திற்கு தணிக்கைத் துறை தடை விதித்த பிறகு போராடித் தான் சான்றிதழ் பெற்றனர்.
செயின் திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பற்றிய இந்தப் படத்திற்கு வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டு டிவியில் ஒளிபரப்ப இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, ஜூலி 2 படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த நிலையில் 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் அனந்தகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில் நையாண்டியாகவும், கோபமாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
'ஜுலி 2' போன்ற ஒரு குடும்பப் படத்தை வெளியிடும் நபர் என் படத்தின் தொலைக்காட்சி உரிமைச் சான்றிதழ் தொடர்பாக பல முறை இ-மெயிலில் தொடர்புகொண்டும் எனக்கு எந்த பதிலும் தரவில்லை' என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.