Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போராடி தணிக்கை சான்றிதழைப் பெற்றது பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ'
சென்னை: மறுதணிக்கையில் ஏ சான்றிதழைப் பெற்றிருக்கிறது பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ' திரைப்படம்.
சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மெட்ரோ'. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை 'ஆள்' புகழ் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.
தொடர் வழிப்பறி கொள்ளைகளை வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சிரிஷ் நாயகனாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்திருக்கின்றனர்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக்கு படக்குழு அனுப்பி வைத்தது. ஆனால் வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளது என்று கூறி இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
தணிக்கை அதிகாரிகளின் மறுப்பால் 'மெட்ரோ' குழு மறுதணிக்கைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர்.
இதுகுறித்து படக்குழு '' செயின் கொள்ளைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை மற்றும் காட்சிகளை அமைத்திருக்கிறோம்.
உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு என்பதால் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. அதனால் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர்.
தற்போது மறுதணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் இப்படத்தை வெளியிடவிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.