Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
49 ஆண்டுகளுக்குப் பின் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்... 100 அரங்குகளில் மறுவெளியீடு!
சென்னை: மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர் நடித்து வசூலில் சரித்திரம் படைத்த ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது.
டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்தப் படம் சென்னை உள்பட தமிழகம் - கேரளா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.
எம்ஜிஆர் - ஜெயலலிதா
எம்.ஜி.ஆர். நடித்து 1965-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆரின் நாயகியாக நடித்திருந்தார். இருவரும் இணைந்த முதல் படம் இந்த ஆயிரத்தில் ஒருவன்தான்.
பிஆர் பந்துலு
நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்தனர். கர்ணன், கப்பலோட்டிய தமிழன் என பிரமாண்ட படங்களை இயக்கி, மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த இயக்குநர் பி.ஆர்.பந்துலுவுக்காக எம்ஜிஆர் நடித்த முதல் படம் இது.
வசூல் சாதனை
1965, ஜூலை 9-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்தது. கறுப்பு வெள்ளை காலமான அன்றைக்கு, இந்தப் படத்தின் கண்கவர் வண்ணமும், எம்ஜிஆரின் கம்பீர நடிப்பும், ஜெயலலிதாவின் அழகும் ரசிகர்களை திரும்பத் திரும்ப அரங்குகளுக்குப் போக வைத்தன.
பாடல்கள்
படத்தின் இன்னொரு ப்ளஸ் இசை மற்றும் பாடல்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கவியரசு கண்ணதாசனும், கவிஞர் வாலியும் காலத்தால் அழியாத இனிய பாடல்களை உருவாக்கியிருந்தனர்.
டிஜிட்டலில்
இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 14-ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கலர் மெருகேற்றப்பட்டு உள்ளது. மொத்தம் 100 தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.
நாடோடி மன்னன்
ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலைக் குவித்தது நினைவிருக்கலாம்.