Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெயலலிதா வாழ்வில் நடந்த அந்த அரசியல் திருப்பச் சம்பவம்... 'தலைவி'க்காக அப்படியே உருவாக்கும் படகுழு
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த அந்தச் சம்பவத்தை, தலைவி படத்துக்காக அப்படியே உருவாக்கி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இந்தி நடிகை கங்கனா ரனவத், ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார்.
சசிகலா பிரியாமணி
நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இவரது எம்.ஜி.ஆர் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. நடிகர் பிரகாஷ்ராஜ், கருணாநிதியாக நடிக்கிறார் என்றும் பிரியாமணி, சசிகலாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
ஜூன் 26 ஆம் தேதி
இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்களின் ஒருவரான பிருந்தா பிரசாத் அறிவித்திருந்தார். அதன்படி ஜூன் மாதம் 26 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதோடு, கங்கனா நடனம் ஆடுவது போன்ற ஸ்டில் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திருப்புமுனை
இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த சம்பவத்தை படக்குழுவினர் இப்போது படமாக்கி வருகின்றனர். எம்.ஜி.ஆர் மறைந்த போது அவரது உடல், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் விட்டு கதறினர்.
வெளியேற்றினர்
அப்போது எம்.ஜி.ஆரின் உடல் டிரெக்கில் மெரினா பீச்சுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உடலின் அருகில் இருந்த ஜெயலலிதாவை, சிலர் அங்கிருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது அந்தக் காட்சியை, தலைவி படத்துக்காக சென்னையில் படமாக்கி வருகின்றனர். சென்னை ராஜாஜி ஹாலில் செட் அமைத்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.