Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: துபாயில் பிரபல இந்திய பாடகர் கைது
Recommended Video
துபாய்: 17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகர் மிகா சிங் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் பாடகரான மிகா சிங் விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றார். அங்கு அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த 17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
மிகா சிங் தனக்கு ஆபாச புகைப்படங்களை செல்போனில் அனுப்பியதாக அந்த மாடல் அழகி துபாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு 3 மணிக்கு மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து துபாயில் உள்ள இந்திய தூரகத்தின் உதவியை நாடியுள்ளார் மிகா சிங் என்று அமீரகத்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சுரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மிகா சிங் மீது இது போன்ற புகார் எழுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக மிகா சிங் மீது புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.