Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: துபாயில் பிரபல இந்திய பாடகர் கைது
Recommended Video
துபாய்: 17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகர் மிகா சிங் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் பாடகரான மிகா சிங் விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றார். அங்கு அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த 17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
மிகா சிங் தனக்கு ஆபாச புகைப்படங்களை செல்போனில் அனுப்பியதாக அந்த மாடல் அழகி துபாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு 3 மணிக்கு மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து துபாயில் உள்ள இந்திய தூரகத்தின் உதவியை நாடியுள்ளார் மிகா சிங் என்று அமீரகத்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சுரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மிகா சிங் மீது இது போன்ற புகார் எழுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக மிகா சிங் மீது புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.