Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புது வருஷம் வந்தாச்சு.. 2019 எப்படி இருந்துச்சு.. சிறு பட்ஜெட் படங்களுக்கு?
சென்னை: சிறிய பட்ஜெட்டுகளைக் கொண்ட திரைப்படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்வது மிகவும் கடினம்.
ஆனாலும், 2019-ல் சிறிய பட்ஜெட் மற்றும் சாதாரண நடிகர்களைக் கொண்டிருந்த சில படங்கள், சிறந்த கதையம்சம் மூலமாக அனைவரின் இதயத்தையும் வென்றன. இவை அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் அல்ல என்றாலும், நம் பாராட்டுக்குத் தகுதியானவை.
1.டூலெட்:
இயக்குனராக தனது முதல் படத்தில், பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் ஒரு அமைதியான சக்திவாய்ந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார், இது நமது சமுதாயத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அது நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை பாதித்த விதத்தையும் மிகச்சிறப்பாகக் கைப்பற்றியது. இயக்குனர் படத்தை மெலோடிராமா செய்வதைத் தவிர்த்து, முடிந்தவரை உண்மையான விஷயங்களை வைத்திருந்தார். இது ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து கிடைத்த மேலும் ஒரு உலக சினிமா.
2. ஜூலை காற்றில்:
இந்த ஆண்டின் மிகவும் கவனிக்கப்படாத படங்களில் ஒன்று ஜூலை காற்றில். தனது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் மூன்று பெண்களுடன் நெருங்கிப் பழகும் ஒரு இளைஞனின் கதை. குடிப்பழக்கம் காதல், முறிவுகள் போன்றவை அழகாக படமாக்கப்பட்டிருந்தது. சுவாரஸ்யமாக எழுதப்பட்ட பெண் கதாபாத்திரங்கள், புத்துணர்ச்சியுடன் கண்ணியத்துடன் நடத்தப்பட்டன என்றாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை.
3.நெடுநல்வாடை:
சசியின் ‘பூ' படத்துக்கு இணையான படம், நெடுநல்வாடை. ஒரு தாத்தாவுக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான பிணைப்பைச் சுற்றியும், ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது ஏற்படும் சங்கடத்தையும் சுற்றி உருவான படம். பூ ராமுவின் நடிப்பு படத்தின் முதுகெலும்பாக இருந்தது, மேலும் அஞ்சலி நாயரின் நடிப்பும் பாராட்டும்படியாக அமைந்தது.
4. சத்ரு:
ஒரு நேர்மையான போலீஸுக்கும் இரக்கமற்ற குற்றவாளிக்கும் இடையில் ஒரு பொதுவான பூனை, எலி விளையாட்டைப் போன்ற படம் சத்ரு. கதிர் சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர்,. இந்த ஆண்டு அவரது திடமான தேர்வுகளில் ஒன்று சத்ரு. இளம் காவலராக கதிர் நன்றாக பொருந்தியிருந்தார். ஒரு ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சாதாரண இளைஞனாக இருந்தார்.
5. வெள்ளை பூக்கள்:
நடிகர் விவேக் சிரிப்பு போலீஸாக பலமுறை நடித்துள்ளார். ஆனால் அவர் ஒரு கெளரவமான தீவிரமான போலீஸாக வருவார் என்று யார் நினைத்திருப்பார்கள்? அமெரிக்காவில் ஒரு கடத்தல் வழக்கை விசாரிக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்தார். இந்த கதைக்களம் மர்மம் நிறைந்தது. இயக்குனர் விவேக் இளங்கோவன், அமெரிக்காவை ஒரு கவர்ச்சியான இடமாக இல்லாமல் மிகவும் யதார்த்தமான முறையில் காட்சி படுத்தியிருந்தார்.
6. சுட்டு பிடிக்க உத்தரவு:
ராம்பிரகாஷ் ராயப்பாவின் சுட்டு பிடிக்க உத்தரவு ஒரு திருட்டு பற்றிய படம் போன்று தொடங்குகினாலும், இறுதியில்தான் இயக்குனர் படத்தைப் பற்றி புரியவைக்கிறார். அவரது முந்தைய படமான தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் விட இப்படம் சிறப்பு. விக்ராந்த், ஓடும் போது ஒரு கொள்ளையனாகவும், மிஷ்கின், குற்றவாளிகளைப் பிடிக்கும் அதிகாரியாகவும், நடிப்பால் ஈர்க்க வைத்தனர்.
7. ஹவுஸ் ஓனர்:
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு இயக்குனராக சிறந்த படம். சென்னை வெள்ளத்தில் துணிச்சலான ஒரு வயதான தம்பதியரைச் சுற்றி ஒரு காதல், ஒரு உறவு நாடகம் மற்றும் எதிர்பாராத ஒரு சோகம் என உருவான படம். கிஷோர் மற்றும் ஸ்ரீரஞ்சனியின் அற்புதமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த ஜோடியின் இளைய வயதினராக நடித்த ‘பசங்க' கிஷோர் மற்றும் லவ்லின் சந்திரசேகர்( நடிகை விஜி சந்திர சேகர் மகள்) ஆகியோரும் மிகவும் நன்றாக இருந்தனர். கிப்ரானின் இசையும் ஒரு சிறப்பம்சமாக இருந்தது.
8. ஜீவி:
இந்த ஆண்டின் மிகவும் பாராட்டப்பட்ட சிறிய படங்களில் ஒன்றான இந்த ஹை-கான்செப்ட் த்ரில்லர் ஸ்கிரிப்ட் ஆகும். (பாபு தமிழ் எழுதியது). தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல் இந்த படம் அனைவரது வரவேற்பையும் பெற்றது. மேலும் இந்த ஆண்டின் மறக்கமுடியாத த்ரில்லர்களில் ஒன்றாகும்.
9. தோழர் வெங்கடேசன்:
நமது சமூக அமைப்பில் உள்ள குறைபாடுகளால் பாதிக்கப்படுபவர்களை உண்மையாக சித்தரித்த படம். தோழர் வெங்கடேசன் கதையின் நாயகனாக நம்மை முழுமையாக உணரவைத்தார்.யாரும் உதவி செய்யாமல் விபத்தில் பலியான ஹரிஷங்கர் நடிப்பு பாராட்டத் தக்கது.மேலும் சோகமான க்ளைமாக்ஸ் நம் கண்களை குளமாக்கும்
10. பக்ரீத்:
ஒட்டகத்தை கதாநாயகனாகக் கொண்ட ஒரு தமிழ் படம் மிகவும் வித்தியாசமாகத் தோன்றலாம், விக்ராந்த் இந்த படத்தில் இதுவரை தனது சினிமா வாழ்க்கையின் மிகச் சிறந்த நடிப்பைக் கொடுத்தார், அதே நேரத்தில் இமான் சில இனிமையான பாடல்களையும், நல்ல பின்னனி ஸ்கோரையும் கொடுத்தார், இது படத்தில் விறுவிறுப்பான தருணங்களை சுவாரசியப் படுத்தியது.
11, கேடி அ கருப்பு துரை:
கருணைக் கொலை பற்றி பேசிக் கொண்டிருப்பதால், கே.டி.யை ஒரு அழுகைபடம் என்று அனைவரும் நினைக்கலாம், ஆனால் சமுதாயத்தால் அனாதையான ஒரு வயதான மனிதனுக்கும் ஒரு சிறு பையனுக்கும் (மு ராமசாமி மற்றும் நாக விஷால் ஆகியோரால் அழகாக கொடுக்கப் பட்டுள்ளது) இடையிலான அற்புதமான உறவை இயக்குனர் மதுமிதா கொடுத்துள்ளார். இந்த பயணம் சிரிப்பு, சோகம், அன்பு, பயம், மற்றும் கோபம் கலந்த கலவை.
12. ஒத்த செருப்பு செஸ் 7:
ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இந்த ஆண்டின் மிக துணிச்சலான முயற்சிகளில் ஒன்று. திரையில் ஒரே நடிகர் அவர் மட்டுமே! அவரது தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் - ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இசை இயக்குனர் சி சத்யா, மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டி ஆகியோர் நாம் பார்ப்பது ஒரு மனிதர் மட்டுமே என்பதை மறக்கச் செய்தனர்.
13. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு:
அறிமுக இயக்குனர் அதியனின் உலகளாவிய கண்ணோட்டத்துடனான படம். தனது வேலையை நேசிக்கும் லாரி டிரைவராக தினேஷ் ஒரு திடமான நடிப்பைக் கொடுத்தார், அதே நேரத்தில் முனிஷ்காந்த் படத்தின் சிறந்த கதா பாத்திரத்தில் நடித்தார். வேகமான ஒளிப்பதிவுடன் வேண்டுமென்றே உரத்த இசையும் ஒலி வடிவமைப்பும் படத்தை மறக்க முடியாததாக ஆக்கியது.
14. சில்லு கருப்பட்டி:
ஹலிதா ஷமீம்ன் காதல் என்ற மந்திர நூலால் இணைக்கப்பட்ட நான்கு கதைகளை நமக்கு கொடுத்துள்ளார். அன்பான நடிப்பு, அழகான காட்சிகள், உணர்ச்சிபூர்வமான இசை ஆகியவற்றால் அன்பாக வடிவமைக்கப்பட்ட இந்த படம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது, நல்ல உணர்வை அளிக்கிறது. அதே நேரத்தில் காதல் நம் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விஷயங்களை எவ்வாறு குறிக்கும் என்பதையும் காட்டுகிறது.