Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'மிருதன்' தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ... ஜெயம் ரவிக்கு லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: 'நாய்கள் ஜாக்கிரதை' புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் மிருதன்.
தமிழின் முதல் ஸோம்பி படம் என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத போக்குவரத்துக் காவலர் வேடத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி மிருதனாக ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தாரா? பார்க்கலாம்.
|
மிருதன்
"மிருதன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று ஜெயம் ரவி போக்குவரத்துக் காவலராக அறிமுகமாகும் காட்சியை பதிவிட்டிருக்கிறார் தெறி பாய்.
|
அடுத்த பிளாக்பஸ்டர்
"மிருதன் நடிகர் ஜெயம் ரவிக்கு இன்னொரு பிளாக்பஸ்டர்" என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ரிப்கான்.
|
தமிழ் சினிமாவை
"மிருதன் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஜெயம் ரவியை மிருதனாக நேசித்தேன். படம் எப்போது முடிந்தது என்பதைக் கூட உணர முடியவில்லை" என்று படத்தின் நீளத்தைப் புகழ்ந்திருக்கிறார் கோபிநாதம்.
|
இதற்கு முன் பார்த்திராத
"மிருதன் தமிழ் சினிமாவில் இதற்கு முன் பார்த்திராத ஒரு ஸோம்பி திரைப்படம். ஜெயம் ரவியின் நடிப்பும், இமானின் பின்னணி இசையும் சூப்பர்" என்று பாராட்டி இருக்கிறார் கண்ணன்.
|
எதிர்பார்த்திராத
"மிருதன் பார்த்தேன். ஜெயம் ரவி மற்றும் சக்தி சவுந்தர்ராஜனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை" என்று பாராட்டி இருக்கிறார் புகழ்.
|
அற்புதமாக
"மிருதன் பார்த்தேன் மிகவும் அற்புதமான ஒரு படம். திகிலை ஏற்படுத்தவும் தவறவில்லை" என்று புகழ்ந்திருக்கிறார் தங்கராஜ்.
|
கடைசி அரைமணி
"கடைசி அரைமணி நேரக்காட்சிகளும், அந்தக் காட்சிகளில் வெளிப்படும் ஜெயம் ரவியின் சிறந்த நடிப்பும், அபாரமான உழைப்பு" என்று படத்தின் முடிவைப் பாராட்டி இருக்கிறார் கவுண்டமணி.
மொத்தத்தில் ஜெயம் ரவியின் மிருதன் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.