Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்று 'ஜெயம் ரவி- விஜய் சேதுபதி' மோதல்... ஜெயிக்கப் போவது யாரு?
இன்று வெள்ளிக்கிழமை ஜெயம் ரவி நடித்த மிருதன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன.
ஜெயம் ரவிக்கும் விஜய் சேதுபதிக்கும் இந்த இரண்டுமே முக்கியமான படங்கள்.
தனி ஒருவன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் படம் மிருதன். தனி ஒருவன் மட்டுமல்ல, 2015-ல் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த எல்லா படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்தவைதான். எனவே அந்த வெற்றிகளைத் தக்க வைக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ரவிக்கு உள்ளது.
தமிழில் வெளியாகும் முதல் ரத்தக் காட்டேரி வகைப் படம் இந்த மிருதன். ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்தது. இதனால் இப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினார்கள். அதில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
நானும் ரெளடிதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவரும் படம் சேதுபதி.
இந்தப் படத்தில் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஆக்ஷன் ஹீரோவாக அவருக்கு இது முதல் படம். எனவே இதன் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
இருவரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்...? பார்க்கலாம்!