Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வேகமாக வந்த கார்.. பிரபல நடிகர் வீட்டுக்குள் நுழைய முயற்சி.. மிரட்டல் விடுத்த 4 பேர் அதிரடி கைது!
ஐதராபாத்: பிரபல நடிகர் வீட்டுக்குள் புகுந்து மிரட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். சுர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.
அந்த சூப்பர் ஹிட் படமும் இருக்காம்.. டொரன்டோ திரைப்பட விழாவில் நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் படம்!
நடிகை லட்சுமி மஞ்சு
இந்தப் படத்தில் அவர் சூர்யாவுக்கு வழிகாட்டியாக நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக, இந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. நடிகர் மோகன் பாபுவுக்கு மனோஜ் மஞ்சு, விஷ்ணு மஞ்சு ஆகிய மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கின்றனர். முன்று பேரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர். லட்சுமி மஞ்சு, தமிழிலும் கடல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
மோகன்பாபு இருக்கிறாரா?
நடிகர் மோகன்பாபுவுக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜல்லப்பள்ளியில் பங்களா உள்ளது. இங்கு குடும்பத்துடன் அவர் வசித்து வருகிறார். இங்கு நேற்று மாலை ஒரு டொயட்டோ கார் வேகமாக வந்தது. பங்களாவின் கேட்டுக்கு அருகே வந்த காரில் இருந்து 4 பேர் இறங்கினர். உள்ளே மோகன்பாபு இருக்கிறாரா? என்று செக்யூரிட்டிகளிடம் கேட்டுள்ளனர். அவர்கள் நீங்கள் யார், என்ன விவரம் என்று கேட்டுள்ளனர்.
சிசிடிவி கேமரா
அப்போது அவர்கள் செக்யூரிட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை மிரட்டினர். இந்த தகவலை நடிகர் மோகன்பாபுவுக்கு அவர்கள் தெரிவித்தனர். இது தெரிந்ததும் அவர்கள் கேட்டில் இருந்து வேகமாக காரில் ஏறி தப்பி ஓடினர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து அவரும் நடிகை லட்சுமி மஞ்சுவும் பஹடிஷரிபஃப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
கைது செய்தனர்
வீடியோ காட்சிகளையும் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், மைலர்தேவ்பள்ளி, துர்கா நகரைச் சேர்ந்த ராகவேந்திரா, ஆனந்த், டேவிட், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் AP 31 AN 0004 என்ற இன்னோவா காரில் நடிகர் மோகன்பாபு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அந்த கார் விஜயலட்சுமி என்பவருக்குச் சொந்தமானது. எதற்காக அவர்கள் மோகன்பாபு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!