காணாமல் போன பாலிவுட் நடிகை- ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ஒருவர் கைது

பாலிவுட் நடிகையான லைலா கான் ஏராளமான் சர்ச்சைகளில் சிக்கியவர். அவருக்கும் வங்கதேச தீவிரவாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வந்தது. இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீருக்கு திருமண நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள வந்த பின் அவரது தாயார், தங்கை உள்ளிட்ட குடும்பத்தாருடன் காணாமல் போனார்.
அவர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டாரா? அல்லது தலைமறைவாகிவிட்டாரா? அவர் கொலை செய்யப்படாரா? என்பது தெரியாமலே இருந்து வந்தது. இந்நிலையில் லைலா கான் பயன்படுத்திய கார், அவர் காணாமல் போன வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை உள்ளூர்காரரான பர்வேஷ் அகமது வாடகைக்கு விட்டு வந்திருக்கிறார். இந்த வாகனத்தை பறிமுதல் செய்த ஜம்மு காஷ்மீர் போலீசார் அதை பயன்படுத்திய நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்த வாகனம் லைலா கானின் தாயார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சில குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகவும் இருப்பதை மும்பை போலீசார், ஜம்மு காஷ்மீர் போலீசாருக்குத் தெரிவித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











