Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தந்தை மரணம்.. லாக்டவுனால் பெங்களூரில் சிக்கிய பிரபல நடிகர்.. இறுதிச்சடங்கில் பங்கேற்கத் தீவிரம்!
சென்னை: தனது தந்தையின் மரணத்தை அடுத்து, லாக்டவுனால் பெங்களூரில் சிக்கிக்கொண்ட நடிகர், மும்பை செல்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. ஸ்டைல் நடிகர் என்று கூறப்படும் இவர், நடனம், ஆக்ஷன் காட்சிகளுக்காக ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்.
80 மற்றும் 90 களில் இந்தி சினிமாவில் புகழ்பெற்ற ஹீரோவாக இருந்த இவர், இந்தி தவிர, பெங்காலி, ஒரியா உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
சுவாரஸ்யம் இல்லையாம்.. அந்த ஆஸ்கர் விருது படத்தைப் பார்க்கும்போது இந்த இயக்குனர் தூங்கிட்டாராம்ல!
யாகவாராயினும் நாகாக்க
தமிழில் ஆதி நடிப்பில் அவர் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கிய 'யாகவாராயினும் நாகாக்க' என்ற படத்தில் மும்பை தாதா கேரக்டரில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இதுதான். இதில் நிக்கி கல்ராணி, பசுபதி உட்பட பலர் நடித்திருந்தனர். அதிகமான படங்களில் நடித்த நடிகர்கள் பட்டியலில் இவரும் இருக்கிறார். சுமார் 576 படங்களில் நடித்திருக்கிறார்.
பிரமாண்ட பங்களா
மும்பையில் இவருக்கு வீடு இருந்தாலும் ஊட்டியில்தான் இவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கு பிரமாண்ட பங்களா இருக்கிறது. அங்கு ஓட்டலும் நடத்தி வருகிறார். ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்த மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை பெயர் பசந்த்குமார் சக்கரவர்த்தி. மும்பையில் வசித்து வந்த பசந்த்குமார், நீண்ட நாட்களாக வயது முதிர்வு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இறுதிச்சடங்கு
அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. இந்நிலையில், மிதுன் சக்கரவத்தி லாக்டவுன் காரணமாக பெங்களூரில் சிக்கிக்கொண்டார். ஒரு படப்பிடிப்புக்காக அங்கு வந்த அவர், திடீரென அறிவித்த லாக்டவுன் காரணமாக அங்கேயே தங்கிவிட்டார். இதனால், இந்த இக்கட்டானச் சூழலில் அவரால் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரங்கல்
இருந்தாலும் மும்பைக்கு செல்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மிதுனின் தாய் சாந்திமோயியும் மிதுனின் மூத்த மகன் மிமோ சக்கரவர்த்தியும் அங்கு இருப்பதாகவும் மிமோ, இறுதிச்சடங்குக்கான வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, மறைந்த மிதுனின் தந்தஇ பசந்த்குமார் சக்கரவர்த்திக்கு ஏராளமான இந்தி பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.