Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிக்பாஸ் வீடு மாதிரி ஆயிடுச்சு... அடுத்து யாரு? மக்கள் நீதி மய்யத்தை பங்கம் பண்ணும் பிரபல நடிகை!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவதை வைத்து அக்கட்சியை பிரபல நடிகை மரண பங்கம் செய்துள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர்.
மே 31 வரை எந்த படப்பிடிப்பும் இல்லை.. உச்ச நட்சத்திரங்கள் உதவ வேண்டும்.. ஆர்கே செல்வமணி கோரிக்கை!
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனும் தோல்வியடைந்தார்.
கட்சியில் இருந்து ஓட்டம்
இதனை தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா என பலரும் கட்சியில் இருந்து ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
சினிமாவை தொடரலாம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபல இயக்குநரான மோகன் ஜி, கமலுக்கு சினிமாதான் சரி, அவர் அதையே தொடரலாம் என்று கூறினார்.
விசுவாசம் எங்கே?
அதனை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகியவர்களை பிக்பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி விளாசி தள்ளினார். உங்களின் விசுவாசம் எங்கே? நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டீர்கள் என்று விளாசியிருந்தார்.
கஸ்தூரி பங்கம்
இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகியதை வைத்து பங்கம் செய்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூட்யூபர் பத்மபிரியா மற்றும் வேளச்சேரியில் இருந்து ஓடிய சந்தோஷ் பாபு ஆகியோர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியுள்ளனர்.
பிக்பாஸ் வீடு போல்
அவர்கள் இருவரும் தேர்தலுக்கு முன்பாகதான் கட்சியில் சேர்ந்தனர். அது பிக்பாஸ் வீடு போன்று ஆகிவிட்டது. அடுத்து யார் போக போகிறார்கள்? என்று கேட்டு #elimination #maiam #kamal ஆகிய ஹேஷ்டேக்குகளை குறிப்பிட்டுள்ளார்.