Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்
Recommended Video
இந்தூர்: நடிகை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இரண்டு பேர் அவரின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்துள்ளனர்.
செய்தித்தாள்களை திறந்தால், டிவியை ஆன் செய்தால் பாலியல் தொல்லை, பாலியல் பலாத்கார செய்திகளாகவே உள்ளது. சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் இது போன்ற அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த நடிகையும், மாடலுமான பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.
ஆக்டிவா
அந்த நடிகை சாலையில் ஹோண்டா ஆக்டிவாவில் சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அவர் சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
தொல்லை
உள்ளே என்ன இருக்கிறது என்று காட்டு என கூறி அந்த 2 பேரும் என் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்தனர். நான் அவர்களை தடுக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆக்டிவாவில் இருந்து கீழே விழுந்துவிட்டேன் என்கிறார் அந்த நடிகை.
தப்பியோட்டம்
நடுத்தெருவில் இது நடந்தும் அந்த நடிகைக்கு யாருமே உதவ முன்வரவில்லையாம். இதற்கிடையே அந்த வாலிபர்கள் பைக்கில் தப்பியோடிவிட்டனர். அந்த நடிகை கேட்டுக் கொண்டதன்பேரில் அவரின் பெயரை வெளியிடவில்லை.
பழி
நீ ஸ்கர்ட் அணிந்து வந்ததால் தான் அந்த பசங்க உன்னிடம் வாலாட்டியுள்ளனர் என்று அங்கிருந்த முதியவர் ஒருவர் என்னிடம் கூறினார். அதை கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது என்று அந்த நடிகை தெரிவித்துள்ளார்.
போலீஸ்
அந்த நடிகை தனது காலை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். காயம்பட்ட கால் புகைப்படத்தை பார்த்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து பதில் போட்டுள்ளார்.