Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விக்ரம் மகனுக்கு ஜோடி சூர்யா-ஜோதிகா மகள் அல்ல, இந்த பெங்காளி மாடலாம்!
Recommended Video
சென்னை: அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் த்ருவுக்கு ஜோடியாக பெங்காளி மாடல் அழகி மேகா நடிக்க உள்ளாராம்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா ரீமேக் செய்து வருகிறார். இந்த படம் மூலம் சீயான் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தேடல்
த்ருவுக்கு ஏற்ற ஹீரோயினை வெகு நாட்களாக வலை போட்டு தேடினார்கள். கவுதமியின் மகள் த்ருவ் ஜோடியாக நடிக்கக்கூடும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
சூர்யா
சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா தற்போது தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தான் வர்மா படத்தில் த்ருவ் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஸ்ரேயா நடிக்கவில்லையாம். மேற்கு வங்கத்தை சேர்ந்த மாடல் அழகி மேகா நடிக்கிறாராம்.
படப்பிடிப்பு
வர்மா படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் துவங்கியது. மகனுடன் சேர்ந்து விக்ரமும் நேபாளம் சென்றார். இதற்கிடையே அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமா
வர்மா படப்பிடிப்பு தளத்தில் த்ருவ் இயக்குனர் பாலாவை மாமா, மாமா என்று பாசமாக அழைக்கிறாராம். அவர் மாமா என்று கூப்பிட்டாலே உருகிவிடுகிறாராம் பாலா.