வாம்பயருக்கு பூண்டை பார்த்தால் பயம், மோடிக்கு யாரை பார்த்தால் பயம் தெரியுமா?: நடிகை ரம்யா
Recommended Video

சென்னை:பிரதமர் மோடிக்கு யாரை பார்த்தால் பயம் என்பதை புகைப்படம் மூலம் விளக்கி ட்வீட்டியுள்ளார் நடிகை குத்து ரம்யா.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளார் நடிகை குத்து ரம்யா. காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ரம்யா பிரதமர் நரேந்திர மோடியின் பயம் குறித்து ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பயம்
வாம்பயருக்கு பூண்டு என்றால் பயம், சூப்பர்மேனுக்கு க்ரிப்டோனைட் என்றால் பயம், மோடிக்கு பிரஸ் கான்பரன்ஸ் என்றால் பயம் என ட்வீட்டியுள்ளார் ரம்யா.
சு. சாமி
ரம்யாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் சு. சாமி என்றால் பயம் என தெரிவித்துள்ளார்.
பொய்
போதும் இன்னும் எவ்வளவு பொய் சொல்வீர்கள் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
பத்திரிகையாளர்கள்
அவருக்கு கேமரா மட்டுமே பிடிக்கும், பத்திரிகையாளர்கள் இல்லாமல் கேமராமேன்களை மட்டும் அனுப்பினால் அவர் வருவார் என ஒருவர் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











