Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை
ஹைதராபாத்: இந்திப் பட நடிகர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை ஏன் தென்னிந்திய சினிமாக்களுக்கு தருவதில்லை என்று நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார். மேலும், பெரிய ஆளுமைகள், பழைய கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவமும் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் அவர் வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக, ஆஸ்கார் விருது மற்றும் உலகளாவிய சினிமாவைப் பொறுத்தவரையில், இந்திய சினிமா என்றால் அது இந்திப் படங்கள் மட்டுமே என்று நம்பவைக்கப்பட்டு வருகிறது. உலக திரைப்பட விழாக்களிலும் இந்தி சினிமாக்களே முன் வரிசையில் சேர் போட்டு உட்கார்ந்துவிடுகின்றன.
ஆஸ்கார் விருது பட்டியலுக்கும் இந்திப்படங்களே தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு செல்லும் பட்டியலில் கூட முதலில், தமிழ் படங்களான வடசென்னை, ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகிய படங்கள் செல்லும் என்று தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில் தத்கால் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தது போல், ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. அதே சமயத்தில் வட சென்னையும் ஒத்த செருப்பு சைஸ் 7ம் தூக்கி எறியப்பட்டன. இது காலம் காலமாக நடைபெற்று வரும் இருட்டடிப்பு என்றே தமிழ் சினிமா பிரபலங்களும் புலம்பி வருகின்றனர்.
தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த சீமராஜா வில்லன் லால்
சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது வேதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா, தென்னிந்திய சினிமா மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து தன்னுடைய வேதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
View this post on InstagramA post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela) on
டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி, தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களை பிரதமராக கொண்டதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் பெரிய ஆளுமைகள், பழைய கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவே நாங்கள் உணர்கிறோம். நான் என் உணர்வுகளை மிகவும் வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். இது சரியான மன நிலையில் ஆக்கப்பூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாகவே நம்புகிறேன்... ஜெய்ஹிந்த்.. என்று குறிப்பிட்டுள்ளார், உபாசனா... தற்போது இந்த லெட்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.