Don't Miss!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Finance இவங்களுக்கு எல்லாம் ஜாக்பாட்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டாம்..!
- News ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரஜினியைத் தேடி வந்து சந்தித்த மோடிக்கே ஓட்டு - இது சென்னை ரஜினி ரசிகர்கள்
சென்னை: எங்கள் தலைவர் ரஜினியை அவர் வீட்டுக்கே தேடி வந்து கவுரவப்படுத்திய நரேந்திர மோடிக்குதான் எங்கள் வாக்கு என்று சென்னை ரஜினி மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த தேர்தல்களில் ரஜினி எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ரசிகர்களும் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தனர்.
தேர்தலில் ரஜினி படத்தை, மன்றக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீறியவர்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது நரேந்திர மோடி ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டார்.
நரேந்திர மோடி பற்றி ரஜினி கூறிய வரிகள் வேறு ரசிகர்களை அவர் பக்கம் திருப்பியுள்ளன.
"நரேந்திரமோடி உறுதியான தலைவர், தகுதியான நிர்வாகி வருங்காலத்தில் அவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும்", என்று ரஜினி சொன்னதை, அவரது ஆதரவு என்றே நினைத்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.
"எங்கள் தலைவர் ரஜினியை நரேந்திர மோடி சந்தித்து பேசியதால் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட முடிவு செய்திருக்கிறோம்," என்று இணையதளத்தில் இயங்கும் ரசிகர்கள் குழுக்கள் தெரிவித்துள்ளன.
சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சைதை ரவி கூறுகையில், "நரேந்திரமோடி எங்கள் தலைவர் ரஜினியை வீட்டில் வந்து சந்தித்தது ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது. எனவே தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளோம்," என்றார்.
மன்றத்தின் மாவட்ட தலைமைப் பொறுப்பிலிருக்கும் மற்றொரு நிர்வாகி கூறுகையில், "ரஜினி எல்லா தலைவர்களுடனும் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறார். நரேந்திர மோடியை சந்தித்ததில் கூட அரசியல் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் பிரதமர் வேட்பாளராக இருக்கும் நரேந்திரமோடி ரஜினியை சந்தித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனசளவில் பாரதிய ஜனதாவை ஆதரிக்கத் தயாராகியுள்ளோம்," என்றார்.
சில ரசிகர்கள், பாமக இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்களை மட்டும் ஆதரிக்க மாட்டோம் என்றும், மதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற ஆதரவளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.