Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
முன்னணி தெலுங்கு நடிகரின் 100வது படத்தை இயக்கும் மோகன் ராஜா!
சென்னை : தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாகார்ஜுனாவின் 97வது திரைப்படத்தை தற்போது ப்ரவீன் சத்தாரு இயக்கி வருகிறார்.
8 ஆண்டுகளுக்கு முன்பே ஏலே படம் குறித்து சூசகமாக கூறிய ஹலிதா சமீம்... வியந்து போன ரசிகர்கள்!
மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்கும் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இதில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
தனி ஒருவன்
தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்த மோகன்ராஜா இப்பொழுது தனித்துவமான அதுவும் சொந்த கதைகளை இயக்கி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் பலரது கவனத்தையும் பெற்றதோடு தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் ரீமேக்
தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்ட இயக்குனர் மோகன் ராஜா அடுத்து தனி ஒருவன் பாகம் 2 கதை உருவாகி வருவதாக கூறிவந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் கிடைத்த லூசிஃபர் திரைப்படத்தை இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிஃபர் சென்ற ஆண்டு வெளியாகி மலையாள திரைப்படத்துறையில் வரலாறு காணாத வசூலை வாரி குவித்த நிலையில் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் நடிகர் சிரஞ்சீவி மோகன்லால் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதையடுத்து மீண்டும் தெலுங்கு திரைப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார்.
அப்பா மகன் உறவை சொல்லும்
பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்க இந்த படம் மல்டி ஸ்டார் கதையாக உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் அகில் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இதற்கு முன்பே இவர்கள் இணைந்து நடித்த மனம் அனைவரது மனங்களையும் வென்று வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது அதே போன்ற கதையில் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமும் உருவாகிறது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையே உள்ள உறவை சொல்லும் கதை என்பது குறிப்பிடத்தக்கது.