Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏன்.. என்ன ஆச்சு.. மோகன் வைத்யாவுக்கு? இப்படி ஒரு பதிவு போட்டிருக்காரே.. குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: கர்நாடக இசைக்கலைஞரான மோகன் வைத்யா ஷேர் செய்துள்ள ஒரு பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா. பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
அவ்வளவு அழுத்தம் கொடுத்து என் கணவரை கொன்னுட்டானுங்க.. கடவுள் பார்த்துப்பாரு.. சீரியல் நடிகை ஆவேசம்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மோகன் வைத்யா. இதன் மூலம் பெரும் பிரபலமானார் மோகன் வைத்யா.
நைனா மோகன் வைத்யா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அவரை நைனா என்று அழைக்க தொடங்கினர். அதன்பிறகு ரசிகர்களும் அவரை நைனா என்று அழைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள மோகன் வைத்யா, அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
ஃபாத்திமா பாபுவுடன் ஜோடி
மேலும் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் மோகன் வைத்யா. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் மோகன் வைத்யாவும் செய்தி வாசிப்பாளரான ஃபாத்திமா பாபுவும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.
ரொம்பவே டிஸ்அப்பாயிண்ட்டட்
அதாவது நான் ரொம்பவே டிஸ்அப்பாயிண்ட்டட் என பதிவிட்டுள்ளார். இளைஞர் ஒருவர் கண்களில் கண்ணீருடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் மோகன் வைத்யா. மேலும் பொறுத்திருந்து பாருங்கள், நான் சொல்வது சரியா என்று சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார் மோகன் வைத்யா.
என்ன ஆச்சு நைனா?
மோகன் வைத்யாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆச்சு நைனா என கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏதாவது பிரச்சனையா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
வனிதா குற்றச்சாட்டு
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, வேலை செய்யும் இடத்தில் துன்புறுத்தல் இருப்பதாகவும் சீனியர் பெண் ஒருவர் தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.
ரசிகர்கள் சந்தேகம்
இதில் ரம்யா கிருஷ்ணன் வனிதா பர்ஃபாமன்ஸுக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதால்தான் பிரச்சனை என கூறப்பட்டது. தற்போது மோகன் வைத்யாவும் டிஸ்அப்பாயிண்ட்டட் என பதிவிட்டிருப்பது ரசிகர்களுக்கு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பிரச்சனையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.