Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மீண்டும் தொடங்குறாங்களாம்... மோகன்லால்- ஜாக்கிசான் நடிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் 'நாயர் ஸான்'
கொச்சி: கைவிடப்பட்டதாகக் கூறப்பட்ட மோகன்லால், ஜாக்கிசான் நடிக்கும் 'நாயர் ஸான்' படம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக வெளிநாடுகளில் ஆதரவு தேடிய முக்கியப் போராளி, கேரளாவைச் சேர்ந்த ஏ.எம்.நாயர் எனப்படும் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர்.
இவரை, நாயர் ஸான் என்று அழைத்தனர். பொறியாளரான இவர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் உணவகம் நடத்தி வந்தார்..
பாரதிராஜாவின்.. குற்றப்பரம்பரை.. வெப் சீரிஸாக மலர்கிறது!
400 கோடி பட்ஜெட்
பிரிட்டீஷ் எதிர்ப்பாளரான இவர், இந்திய தேசிய ராணுவத்துக்கும் நேதாஜிக்கும் உதவி செய்தவர். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில், மலையாளத்தில் படம் உருவாக்க, கடந்த 2009 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
ஆல்பர்ட் அன்டோனி
இதற்கு வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதலீடு செய்ய முன் வந்தது. படத்தை, நவ்யா நாயர் நடித்த கண்ணே மடங்குகா, ராகுல் மாதவ் நடித்த வாடாமல்லி ஆகிய மலையாள படங்களை இயக்கிய, ஆல்பர்ட் அன்டோனி இயக்குவதாக இருந்தார்.
ஜாக்கிசான்
மோகன்லால் ஹீரோவாகவும் ஜாக்கிசான் இன்னொரு ஹீரோவாகவும் நடிக்க இருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க இருந்தார். இந்நிலையில் இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டது. மோகன்லாலுக்கு சர்வதேச மார்க்கெட் வேல்யூ இல்லாததால் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
மீண்டும்
இப்போது, மோகன்லாலின் புலி முருகன் மற்றும் ஜனதா கேரேஜ் படங்கள் ஓவர்சீஸிலும் வரவேற்பை பெற்றிருப்பதால் இந்தப் படத்தை மீண்டும் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.