Don't Miss!
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- News மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார்
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒன்றரை வருஷமாக ஒரு கதாபாத்திரத்திற்கு தயாராகப் போகும் சூப்பர்ஸ்டார்
திருவனந்தபுரம்: மகாபாரதா படத்தில் பீமராக நடிக்கவிருக்கும் மோகன்லால் அந்த கதாபாத்திரத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் வேறு எதிலும் கமிட்டாகப் போவது இல்லையாம்.
மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து மகாபாரதா என்ற படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்க உள்ளார். ரூ. 1000 கோடி செலவில் எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் மோகன்லால் பீமராக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மோகன்லால் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
மகிழ்ச்சி
பீமராக நடிப்பதில் மகிழ்ச்சி. இந்தியாவில் உள்ள பல குழந்தைகளை போன்று நானுமம் மகாபாரதம் மற்றும் ராமாயணக் கதைகள் கேட்டு வளர்ந்தவன்.
பீமர்
பீமர் என்றால் நம்பிக்கையான சகோதரர், அவருக்கு நிறைய பசி எடுக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாம்மூழம் நாவலை படித்த பிறகே பீமரின் எமோஷனல் பக்கம் தெரிய வந்தது.
கதாபாத்திரம்
எம்டி சார் தான் பீமர் கதாபாத்திரத்திற்கு என் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் பல காலமாக பீமர் ஒரு பகுதியாகவே உள்ளார்.
தயார்
அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எனக்கு வேறு எந்த கமிட்மென்ட்டும் கிடையாது. பீமர் கதாபாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்ளப் போகிறேன். போர்க்காட்சிகளில் நடிக்க பல ஆசிரியர்களிடம் பயிற்சி பெறப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.