Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
கொச்சி: மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரியதர்ஷன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் மலையாளப் படம், 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.
மரண குத்து.. ஆரத்தி எடுத்து.. மேள தாளத்துடன் பாலாவை வரவேற்ற சொந்தங்கள்.. வேற லெவல் வீடியோ!
மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த வரலாற்றுப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.
16 ஆம் நூற்றாண்டு
இந்தப் படத்துக்கு தமிழில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்று டைட்டில் வைத்துள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
மஞ்சு வாரியர்
இதில், குஞ்சலி மரைக்காயராக, மோகன்லால் நடித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.
கலைப்புலி தாணு
இந்தப் படத்தை தமிழில், கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்தப் படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட அதே தேதியில் இந்த வருடம் வெளியிட இருப்பதாகக் கூறப்பட்டது..
தள்ளி வைப்பு
தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால், இப்போது இதன் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. எப்போது ரிலீஸ் என்று தேதி அறிவிக்கப்படவில்லை. கொரோனா
முழுவதுமாக ஓய்ந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓணம் பண்டிகைக்கு வெளியாகலாம் என்றும் தெரிகிறது.