Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"கபாலி"யைப் பார்த்து பதுங்கிய "புலி".. தள்ளிப் போன மோகன்லால் படம்!
திருவனந்தபுரம்: ரஜினியின் கபாலி படத்தால், கேரளாவில் தனது புலிமுருகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் மோகன்லால் தள்ளி வைத்திருக்கிறார்.
மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் புலிமுருகன்.
25 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதி பாபு, கிஷோர் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜூலை 7 ம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு தற்போது ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. ரஜினியின் கபாலி வெளியாவதுதான் இதற்கான காரணம் என்று சொல்கின்றனர்.
ஜூலை மாதம் ரஜினியின் கபாலியும், மம்முட்டியின் 'கசாபா'வும் அதிகத் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் புலிமுருகன் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழ, 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழிகேற்ப மோகன்லால் தன்னுடைய படத்தைத் தள்ளி வைத்து விட்டார்.