நடிகை அனுராதா மீது தொழிலதிபர் பண மோசடி புகார்

வில்லாபுரம் அன்புடன் வரவேற்கிறது, புடிச்சா புளியங்கொம்பு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அனுராதா.
இவர் மீது சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதரன் என்பவர் கமிஷனரிடம் பணமோசடி புகார் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ''எனக்கும் அனுராதா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ஆகையால், அவரை கதாநாயகியாக நடித்த மேற்கண்ட படங்களுக்கு 40 லட்சம் பைனான்ஸ் செய்தேன்.
இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தோம். இதுமட்டுமல்லாமல் பணம்,சொத்து, நகை என மொத்தம் ஒன்றைரை கோடிக்கு மேல் என்னிடம் இருந்து அனுராதா கறந்துவிட்டார். இப்போது அதை திருப்பி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்''என்றார்.


Click it and Unblock the Notifications











