Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ராம.நாராயணன் மீது போலீஸில் பண மோசடிப் புகார் எதிரொலி- கைதாவாரா?
இதுகுறித்து குட்வில் மூவீஸ் உரிமையாளர் கே.வி.குணசேகரன், எம்.ஆர்.மூவீஸ் நிறுவன உரிமையாளர் ராஜசிம்மன், பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ் உரிமையாளர் ஜி.பாபுகணேஷ் ஆகியோர் கொடுத்துள்ள புகாரில்,
சினிமா துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அப்போதைய தலைவர் ராம.நாராயணன் அளித்திருந்தார்.
இதற்கான சந்தாவாக ரூ.2,500 தொகையை வழங்கினோம். சங்க உறுப்பினர்களிடமும் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ரசீதை யாருக்கும் அவர் வழங்கவில்லை. இந்த திட்டம் எந்த அளவுக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று கேட்டதற்கு ராம.நாராயணன் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியை சங்கத்தின் சார்பில் அவர் நடத்தினார். இந்த நிகழ்ச்சியை வெளியிடுவதற்கான உரிமையை சங்கத்தை கலந்தாலோசிக்காமல் தனியார் டி.வி. ஒன்றுக்கு ராம.நாராயணன் கொடுத்துள்ளார்.
இதுபோன்ற பல நிகழ்வுகளில் அதிக அளவில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர் ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.
எனவே ராம.நாராயணன் மற்றும் சங்க ஊழியர்கள் ரபி, குரு, மூர்த்தி ஆகியோரை பிடித்து, ஆவணங்களை கைப்பற்றினால் பல மோசடி விவரங்கள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமநாராயணன் உள்ளிட்டோரைப் பிடித்து கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.