Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
லட்சக்கணக்கில் ஏமாற்றிவிட்டார்.. பண மோசடி செய்துவிட்டார்.. விஜய் அப்பா மீது போலீசில் புகார்!
நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர் ஆவார். 80-90 களில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர், அதன்பின் டைரக்ட் செய்வதை குறைத்துக் கொண்டார்.
கடந்த சில வருடங்களாக இவர் தமிழில் படம் எதுவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் விழாக்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு வருகிறார்.
முதல் நாளேவா.. ரைட்டு.. வனிதா வந்த வேலையை சிறப்பா பண்ண ஆரம்பிச்சுடுச்சு!
என்ன வழக்கு
இந்த நிலையில்தான் எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேரு சமுதாய பிரச்சனைகளுக்கு பொதுநல வழக்கு தொடுப்பவர் டிராபிக் ராமசாமி. இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலம்.
என்ன படம்
இவரை பற்றி வெளியான படம் டிராபிக் ராமசாமி. கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் டிராபிக் ராமசாமி வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை முதலில் தமிழ்நாட்டில் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவர் வெளியிடுவதாக இருந்தது .
என்ன பணம்
இந்த படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாகக் கூறி 21 லட்சம் ரூபாய் எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கி இருக்கிறார். படத்தை நீங்களே வெளியிடுங்கள், முன்பணமாக 21 லட்சம் கொடுங்கள் என்று எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கி இருக்கிறார். ஆனால் கடைசியில் எஸ்.ஏ சந்திரசேகரே படத்தை வெளியிட்டார்.
ஆனால் இல்லை
அவரே தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டார். ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் பிரம்மானந்தம் சுப்பிரமணியனிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. வட்டியுடன் கேட்டும், இன்னும் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் எஸ்.ஏ சந்திரசேகர் மீது புகார் அளித்துள்ளார்.
புகார்
பண மோசடி செய்ததாக எஸ்.ஏ சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரம்மானந்தம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் .தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியீட்டு உரிமையை வழங்காமல் ஏமாற்றியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார் .
-
என் குடும்பம் தான் என் பலம்.. எனக்கு தோன்றியதை செய்வேன்.. ஏ.ஆர்.ரகுமானின் மகள் பேட்டி!
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா