Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லட்சக்கணக்கில் ஏமாற்றிவிட்டார்.. பண மோசடி செய்துவிட்டார்.. விஜய் அப்பா மீது போலீசில் புகார்!
நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர் ஆவார். 80-90 களில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர், அதன்பின் டைரக்ட் செய்வதை குறைத்துக் கொண்டார்.
கடந்த சில வருடங்களாக இவர் தமிழில் படம் எதுவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் விழாக்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு வருகிறார்.
முதல் நாளேவா.. ரைட்டு.. வனிதா வந்த வேலையை சிறப்பா பண்ண ஆரம்பிச்சுடுச்சு!
என்ன வழக்கு
இந்த நிலையில்தான் எஸ்.ஏ சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேரு சமுதாய பிரச்சனைகளுக்கு பொதுநல வழக்கு தொடுப்பவர் டிராபிக் ராமசாமி. இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலம்.
என்ன படம்
இவரை பற்றி வெளியான படம் டிராபிக் ராமசாமி. கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் டிராபிக் ராமசாமி வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை முதலில் தமிழ்நாட்டில் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவர் வெளியிடுவதாக இருந்தது .
என்ன பணம்
இந்த படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாகக் கூறி 21 லட்சம் ரூபாய் எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கி இருக்கிறார். படத்தை நீங்களே வெளியிடுங்கள், முன்பணமாக 21 லட்சம் கொடுங்கள் என்று எஸ்.ஏ சந்திரசேகர் வாங்கி இருக்கிறார். ஆனால் கடைசியில் எஸ்.ஏ சந்திரசேகரே படத்தை வெளியிட்டார்.
ஆனால் இல்லை
அவரே தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டார். ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் பிரம்மானந்தம் சுப்பிரமணியனிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. வட்டியுடன் கேட்டும், இன்னும் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் எஸ்.ஏ சந்திரசேகர் மீது புகார் அளித்துள்ளார்.
புகார்
பண மோசடி செய்ததாக எஸ்.ஏ சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரம்மானந்தம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் .தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியீட்டு உரிமையை வழங்காமல் ஏமாற்றியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார் .