தமிழகத்தில் காவியும் தாமரையும் ஏன் மலராது?: மூடர்கூடம் நவீன் 'நச் ட்வீட்'
சென்னை: தமிழகத்தில் தாமரை மலராது என்பது குறித்து ட்வீட்டிய இயக்குனர் நவீனை நெட்டிசன்ஸ் பாராட்டியுள்ளனர்.
மூடர்கூடம் படம் மூலம் பிரபலமான இயக்குனர் நவீன் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது என்று நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.
மேலும் மீம்ஸ் கிரியேட்டர்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ் போட்டு அதை உறுதி செய்கிறார்கள். இந்நிலையில் நவீன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
கல்யாணம்
நம்ம ஊர் மக்கள் குறித்து நவீன் போட்ட ட்வீட்டை பார்த்த ஒருவர் பாய் சொன்னா சரியாக இருக்கும் என்று கமெண்ட் போட்டார்.
பாய்
பாய் கமெண்ட்டை பார்த்த நவீன் ட்வீட்டியிருப்பதாவது, " 'பாய்'னா உருது மொழியில் சகோதரன்னு அர்த்தம். பெரியார் வழி நிற்கும், மதங்கள் கடந்து அனைவரும் சகோதரர்களாக பழகும் என் தமிழகத்தில் காவியும் தாமரையும் ஏன் மலராது என்பதற்கான பதில் இங்கு இருக்கிறது. மனிதர்களான தமிழர்களான எங்களை மதங்களாக பிரித்தாழும் உங்கள் சூழ்ச்சி இங்கு செல்பே எடுக்காது"
நன்றி
தாமரை மலர்வது குறித்து நவீன் போட்ட ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாராட்டு
நவீனின் ட்வீட்டை பார்த்து சிலர் பாராட்டியபோதிலும், சிலரோ அந்த ஆளுக்கு எல்லாம் பதில் சொல்லாதீங்க அண்ணா என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











