Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2025... இந்தியா - சீனா யுத்தம்தான் 'மூன்றாவது உலகப் போர்'!
ஆண்டு கிபி 2025... இரு பெரும் வல்லரசுகள். ஒன்று இந்தியா.. மற்றொன்று சீனா. இந்த வல்லரசுகளின் பெரும் மோதல்தான் மூன்றாம் உலகப் போராக வெடிக்கப் போகிறது.
-இப்படி ஒரு பின்னணியில், ஒரு சர்வதேச படத்துக்குரிய தரத்துடன் தயாராகிறது 'மூன்றாம் உலகப் போர்' திரைப்படம்.
சுனில்குமார், அகிலா கிஷோர், வில்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை சுகன் கார்த்தி இயக்கியுள்ளார். வேத் சங்கர் இசையமைத்திருக்கிறார். தேவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சீனர்
சுனில்குமார் இதில் இந்திய போர் வீரனாக நடித்திருக்கிறார். சீனாவில் பிறந்து வளர்ந்து, சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்ட வில்சன், சீனா போர் படை தளபதியாக நடித்திருக்கிறார்.
கிராபிக்ஸ்
இந்தப் படம் இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும், படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காகவே 1 ஆண்டு செலவிட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னையிலேயே இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எபெக்ட்ஸ் அன்ட் லாஜிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.
2025
2025-ல் போர் நடப்பது போன்ற கற்பனை கதை என்பதால், அந்த காலக்கட்டத்தின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, போர் கருவிகள் மற்றும் ராணுவ தளவாடங்களை யூகித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர்.
பெருமை
இயக்குநர் சுகன் கூறுகையில், "இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும், தான் ஒரு இந்தியன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறோம்," என்றார்.
யு சான்று
இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர். வரும் ஜனவரி 22-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.