Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியா- சீனா கற்பனைப் போர் குறித்த கதை சொல்லும் மூன்றாம் உலகப்போர்!
ஆர்டின் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பாக டி.ஆர்.எஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் தயாரிக்கும் படம் மூன்றாம் உலக போர்.
பாலை படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை அண்ணாமலை எழுதுகிறார். பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலை பாடியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. இந்தப் போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி மூன்றாம் உலகப் போர் நடக்கிறது? என்பது தான் 'மூன்றாம் உலகப் போர்' படத்தின் கதை.
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அகிலா கிஷோர்தான் மூன்றாம் உலகப்போர் படத்தின் நாயகி.
இன்ஜினீயரிங் பட்டதாரியான அகிலா கிஷோர் பெங்களூரைச் சார்ந்தவர். கன்னடத்தில் 'பதே பதே' படத்தில் அறிமுகமான அகிலா, கன்னடம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் 'மூன்றாம் உலகப் போர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்க உள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.