Don't Miss!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்
தான் யாரையும் காதலிக்கவில்லை என நடிகை மௌனி ராய் தெரிவித்துள்ளார்.
மும்பை: துபாய் காதலர் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகை மௌனி ராய்.
நாகினி என்ற ஒரே சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எனவே சீரியல்களில் நடிப்பதில்லை.
மௌனி ராய் நடித்த 'மேட் இன் சைனா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
துபாய் காதலர்
இந்நிலையில் துபாய் நாட்டை சேர்ந்த வங்கியாளர் சூரஜ் நம்பியார் என்பவரை மௌனி ராய் காதலிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான் சிங்கிள் தான்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, " நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் இப்போது சிங்கிள் தான். இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி பரவுகிறது என்பதே எனக்கு புரியவில்லை. மற்றவர்களை போல என்னையும் ஆண் நண்பர்கள் வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். ஆண் நண்பர்களுடன் நான் நேரம் செலவழித்தால், உடனே அது காதலாகிவிடாது.
திருமணத்துக்கு அவசரமில்லை
எனக்கு பிடித்த மாதிரியான நபரை நான் பார்க்கும் போது, நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். எல்லோருக்கும் தெரிவித்து ஊரைக்கூட்டி தான் திருமணம் செய்துகொள்வேன். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி எனது குடும்பத்தினர் யாரும் நிர்பந்திக்கவில்லை. எனக்கு எந்த அவசரமும் இல்லை", என மௌனி ராய் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வந்த கிசுகிசு
ஏற்கனவே நடிகர் மோஹித் ரெய்னாவை மௌனி ராய் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து இருவருமே வாய்த்திறக்கவில்லை. அந்த தகவலை இருவருமே மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் சூரஜ் நம்பியார் உடனான காதல் கிசுகிசுவை மறுத்துள்ளார் மௌனி ராய்.
மௌனி ராயின் நம்பிக்கை
படங்களை பொறுத்தவரை மிக அதிகமான பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகிவரும் பிரமாஸ்த்ரா படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் மௌனி. இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் மௌனி ராய்.