Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்
தான் யாரையும் காதலிக்கவில்லை என நடிகை மௌனி ராய் தெரிவித்துள்ளார்.
மும்பை: துபாய் காதலர் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகை மௌனி ராய்.
நாகினி என்ற ஒரே சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எனவே சீரியல்களில் நடிப்பதில்லை.
மௌனி ராய் நடித்த 'மேட் இன் சைனா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
துபாய் காதலர்
இந்நிலையில் துபாய் நாட்டை சேர்ந்த வங்கியாளர் சூரஜ் நம்பியார் என்பவரை மௌனி ராய் காதலிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான் சிங்கிள் தான்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, " நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் இப்போது சிங்கிள் தான். இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி பரவுகிறது என்பதே எனக்கு புரியவில்லை. மற்றவர்களை போல என்னையும் ஆண் நண்பர்கள் வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். ஆண் நண்பர்களுடன் நான் நேரம் செலவழித்தால், உடனே அது காதலாகிவிடாது.
திருமணத்துக்கு அவசரமில்லை
எனக்கு பிடித்த மாதிரியான நபரை நான் பார்க்கும் போது, நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். எல்லோருக்கும் தெரிவித்து ஊரைக்கூட்டி தான் திருமணம் செய்துகொள்வேன். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி எனது குடும்பத்தினர் யாரும் நிர்பந்திக்கவில்லை. எனக்கு எந்த அவசரமும் இல்லை", என மௌனி ராய் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வந்த கிசுகிசு
ஏற்கனவே நடிகர் மோஹித் ரெய்னாவை மௌனி ராய் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து இருவருமே வாய்த்திறக்கவில்லை. அந்த தகவலை இருவருமே மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் சூரஜ் நம்பியார் உடனான காதல் கிசுகிசுவை மறுத்துள்ளார் மௌனி ராய்.
மௌனி ராயின் நம்பிக்கை
படங்களை பொறுத்தவரை மிக அதிகமான பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகிவரும் பிரமாஸ்த்ரா படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் மௌனி. இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் மௌனி ராய்.