Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஊருக்குத் திரும்ப துடிச்சுட்டு இருக்கேன், முடியலையே.. அபுதாபியில் சிக்கிக்கொண்ட நடிகை வருத்தம்!
மும்பை: இந்தியாவுக்கு இன்னும் திரும்ப முடியவில்லை என்று பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாகினி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மெளனி ராய். இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர். அக்ஷய் குமாரின் கோல்டு படத்தில் நடித்த இவர், யஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
400 படங்களுக்கு மேல் நடித்த.. பிரபல பாலிவுட் காமெடி நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
நெகட்டிவ் கேரக்டர்
அடுத்து, மேட் இன் சைனா படத்தில் நடித்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா உட்பட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஹீரோ படமான இதை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் மெளனி ராய்.
ஷூட்டிங் தடை
'மொகுல்' படத்தில் ஆமிர்கான் ஹீரோவாக நடிக்கிறார். மெளனி ராய் ஹீரோயினாக நடிக்கிறார். சுபாஷ் கபூர் இயக்குகிறார். லாக்டவுன் காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இதற்கிடையே உலகையே மிரட்டும் கொரோனா காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றுக்காக, லாக்டவுனுக்கு முன் அபுதாபி சென்ற நடிகை மெளனி ராய் அங்கு சிக்கிக் கொண்டார்.
மூன்று மாதங்கள்
சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. கடந்த 3 மாதங்களாக அங்கு இருக்கும் அவர், ஊருக்குத் திரும்புவதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை என்று கூறியிருக்கிறார் அவர். இதுபற்றி அவர் இப்போது அளித்துள்ள பேட்டியில், அபுதாபியில், என் ஃபிரண்ட் வீட்டில் இருக்கிறேன். இங்கு இருப்பதில் மகிழ்ச்சிதான்.
இந்தியா திரும்ப
இருந்தாலும் என் அம்மாவையும் சகோதரரையும் பார்க்க முடியவில்லை என்கிற கவலை இருக்கிறது. அவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹரில் இருக்கிறார்கள். போனில் பேசிக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்தியா திரும்புவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் பயணம் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை. விரைவில் திரும்பி விடுவேன் என்று நினைக்கிறேன்.
Recommended Video
வெளியே செல்லவில்லை
தோழியின் குடும்பத்தினர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக நான் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. காய்கறி, மளிகை சாமான்கள் வாங்குவதற்கு மட்டும் ஒரிரு முறை வெளியே சென்றேன். மற்றபடி எங்கும் செல்லவில்லை. இந்த கடினமான நேரத்தை எனது சமையல் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ஆன்லைன் பகவத் கீதை வகுப்புகளில் பங்குபெறவும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.