Just In
- 15 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 1 hr ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- News
பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Finance
Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு?
மும்பை: அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர், வித்யா பாலன். இந்தியில், ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சஞ்சய் தத், சைஃப் அலிகான், நடித்த பரினீதா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் இவர்,

ஷெர்னி நாயகி
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான, டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஷெர்னி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இரவு விருந்து
இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வித்யா பாலன் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில், மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

படப்பிடிப்பு ரத்து
இதனால் வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இரண்டு வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டதாம். இதனால் படப்பிடிப்பு குழுவால் வனப்பகுதிக்குள் சென்று ஷூட்டிங் நடத்த முடியவிலை. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் மறுப்பு
அமைச்சர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வித்யா பாலன் செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், இதைத அமைச்சர் விஜய் ஷா மறுத்துள்ளார். ‘அவர்கள்தான் இரவு விருந்துக்கு என்னை அழைத்தனர்.
நான் இப்போது முடியாது, மகாராஷ்டிரா செல்லும்போது அவர்களை சந்திப்பேன் என்று சொன்னேன்.

தவறாக நடந்தார்
இதனால் அந்த இரவு விருந்து கேன்சல் செய்யப்பட்டது. படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடவில்லை.'என்றார். முன்னதாக, படப்பிடிப்பின் போது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக, நடிகர் விஜய் ராஜ் மீது போலீஸில் புகார் கூறப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.