Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏன் மிஸ்டர் அருவி இயக்குனரே, இது உங்களுக்கே நியாயமாக இருக்கா?
சென்னை: அருவி இயக்குனர் அருண் பிரபுவுக்கு ஒரு கேள்வி.
கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் 3 வயது பெண் குழந்தையை கூட பலாத்காரம் செய்து கொலை செய்யும் கொடூரன்கள் தமிழகத்தில் இருப்பது தான்.
பச்ச மண்ணையும் காமக்கண்ணோடு பார்க்கும் கயவன்கள் நம் மத்தியில் உள்ளனர் என்பது திடுக்கிட வைக்கிறது.
பலாத்காரம்
அருவி படத்தில் சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சியில் அருவி கலந்து கொள்வார். தன்னை பலாத்காரம் செய்த 3 பேரையும் மன்னிப்பு கேட்குமாறு கூறுவார் அருவி. நிகழ்ச்சியை நடத்தும் பெண் அந்த 3 பேரையும் திட்டுவார்.
வேண்டாம்
நிகழ்ச்சியை நடத்தும் பெண் திட்டிய பிறகு அருவியை பார்த்து நீனும் அந்த 3 பேரையும் நல்லா திட்டுமா என்பார். ஆனால் அருவியோ வேண்டாம் அவர்கள் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும் என்பார். இதையடுத்து ஒருவர் மட்டும் மன்னிப்பு கேட்பார்.
எல்லாம் சரி
சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சியின் முடிவில் அந்த பாதகர்கள் மூன்று பேரும் மன்னிப்பு கேட்பது போன்று பார்க்க அருவி மன்னித்துவிடுவது போன்று காண்பித்துள்ளார் இயக்குனர்.
தண்டனை
அன்பால் காமக்கொடூரர்களை திருத்தும் காலத்தில் நாம் வாழவில்லை என்பதை இயக்குனர் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டையே அதிர வைத்த நிர்பயா நிலையை அருண் பிரபு மட்டும் மறந்திருக்க முடியாது. அதன் பிறகும் பிறந்த பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை பலரும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
திருந்தணும்
பெண்களை போதைப் பொருளாக மட்டுமே பார்க்கும் காமக்கொடூரர்களை அன்பால் மன்னித்துவிடுவது அவர்களின் கொடூர செயலை ஏற்றுக் கொள்வது போன்றாகிவிடும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுப்பது தான் சரி. இந்நிலையில் அருவி படத்தில் வரும் மன்னிப்பு காட்சியை ஏற்றுக் கொள்ளவே முடியாது மிஸ்டர் அருண் பிரபு.