Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரபல பெங்காலி இயக்குனர் மிருனால் சென் மரணம்
கொல்கத்தா: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பெங்காலி இயக்குனர் மிருனால் சென் இன்று காலமானார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல இயக்குனர் மிருனால் சென். ஆகாஷ் குசும்(1965), கொல்கத்தா(1971), ஏக் தின் பிரதிதின்(1980), காந்தார் (1984) உள்ளிட்ட பல படங்களை இயக்கிவர் மிருனால் சென்.
பொவானிபூரில் வசித்து வந்த அவர் இன்று காலை 10.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. தாதா சாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வாங்கிய அவர் ராத் போரே(1955) படம் மூலம் இயக்குனர் ஆனார். திரையுலகிற்கு வந்த உடன் அவருக்கு வெற்றி கிடைத்துவிடவில்லை.
1960ம் ஆண்டு வெளியான பைஷே ஷ்ராவனா படம் தான் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்ரபர்த்தி மிருனால் சென்னின் ம்ரிகயா படம் மூலம் நடிகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருனால் சென்னின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.