Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தயாரிப்பாளராகிறாரா தோனி?... நயன்தாராவை வைத்து படம் எடுக்கிறாரா?...உண்மை என்ன?...புதிய தகவல்
சென்னை : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு மகேந்திர சிங் தோனிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் இவரை 'தல' தோனி என்று செல்லமாக அழைப்பார்கள்
கடந்த இரண்டு தினங்களாக சோஷியல் மீடியாவில், எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகவும். அதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், எம் எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும்.
பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள முதல் படத்தில், கதாநாயகியாக நடிப்பதற்காக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது எனவும் செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத்தீ போல பரவின. பலரும்,தோனி ஏன் திடீரென சினிமாவில் நுழையும் முடிவை எடுத்துள்ளார் என்றும் கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்தன.
வதந்திகளை நம்பாதீங்க... என்ன தோனி இப்படி சொல்லிட்டாரு!
இந்நிலையில் இந்த தகவல் குறித்து தோனி எண்டர்டெயிண்மண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தோனி தற்போது வரை சஞ்சய் என்ற எந்தவொரு நபருடனும் இணைந்து பணிபுரியவில்லை. தமிழில் திரைப்படம் தயாரிப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யான வதந்திகள் எனவும், தோனி எண்டர்டெயிண்ட்மண்ட் மற்ற பணிகளில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.