Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுஷாந்தை தொடர்ந்து தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகரும் திடீர் தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சுஷாந்தை தொடர்ந்து தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகரான சந்தீப் நஹார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது.
இதில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தோனியாக நடித்தார். அப்படியே அச்சு அசல் தோனியை போன்றே அங்க அசைவுகளை வெளிப்படுத்தினார்.
15 வயசு இயக்குநர்.. 10ம் வகுப்பு படித்துக் கொண்டே படம் எடுக்கும் குட்டிப் பையன்.. எப்படி தெரியுமா?
முன்னணி நடிகராக
இந்தப் படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனால் சுஷாந்துக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாக காரணமாயிருந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் முன்னணி நடிகராகவும் வலம் வந்தார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை குடியிருப்பில்
இந்நிலையில் தோனி படத்தில் நடித்த மற்றொரு இளம் நடிகரான சந்தீப் நஹார் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கோரேகானில் உள்ள அடுக்குமாடி குடியருப்பில் வசித்து வந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஃபேஸ்புக்கில் பதிவு
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டோனி படத்தில் இவர் சுஷாந்திற்கு நண்பனாக நடித்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன் சந்தீப் நஹார், வீடியோ ஒன்றை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மனைவியை குறை சொல்லாதீங்க
அதில் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், திருமண வாழ்க்கை உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார் சந்தீப் நஹார்.
இந்த வாழ்க்கை நரகம்
இந்த வாழ்க்கை நரகம் என்றும், தன்னுடைய பட வாய்ப்புகள் கடைசி நேரத்தில் பறிபோகிறது என்றும் உருக்கமாக பேசியுள்ளார். சந்தீவ் நஹாரின் தற்கொலை ரசிகர்கள் மத்தியிலும் பாலிவுட் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.