Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அஞ்சலியைத் துரத்துவதை விட்டு, நடிப்புக்குத் திரும்பிய இயக்குநர் களஞ்சியம்!
தன் படத்தில் நடிக்கவில்லை, தன்னைப் பற்றி அவதூறு சொல்லிவிட்டார் என்றெல்லாம் நடிகை அஞ்சலி மீது துரத்தித் துரத்தி வழக்குப் போட்டுக் கொண்டிருந்த இயக்குநர் மு களஞ்சியம் இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் (ஊர்சுற்றிப் புராணம் என்னாச்சுங்க?).
ஆனந்த மழை
ஜி.கே. அறிவுச்சோலை திரைப்பட நிறுவனமும், அப்போலைன் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. பெயர் ஆனந்த மழை.
சுப தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். இவர் சரண்ராஜ் நடித்த கரிசல்மண் படத்தை இயக்கியவர். ஸ்டீபன் ராயல் இசையமைக்கிறார். கணேஷ் ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
மு களஞ்சியம்
இதில் ஜெய் ஆனந்த், சுப தமிழ்வாணன், சிவா ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மு.களஞ்சியம் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். இரண்டு கெட்டப்புகளுக்கும் கொஞ்சம் ஒற்றுமையில்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்குமாம். புதுமுக கதாநாயகிகளாக விகீதா, ஸ்ரீஜா நடிக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, செந்தில், சிங்கமுத்து, லியாகத் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதான் கதை
வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், சாதிப்பதற்காக எப்பவுமே சந்தோஷமாக இருக்கும் கவிஞரின் அறை தோழர்களாக, வாழ்க்கையில் விரக்தியடைந்த இரண்டு இளைஞர்கள் வந்து சேர்கிறார்கள். கவிஞரைச் சந்தித்த பின் புத்துணர்ச்சி பெற்று, புரட்சிகரமான சிந்தனைகளுடன் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அப்படித் தொடங்கும் புதிய வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் ‘ஆனந்த மழை' படத்தின் கதை.
அஞ்சலி இருக்கும் ஹைதராபாதில்
தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பும் கிளைமாக்ஸும் ஹைதராபாதில் எடுக்கப்பட உள்ளன. சென்னைக்கே வரமாட்டேன் என அஞ்சலி ஹைதராபாதிலயே இருப்பதால் அங்கே படப்பிடிப்பை வைத்துக் கொண்டார் போலிருக்கிறது களஞ்சியம்!