Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்
சரிதாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்துவிட்ட நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள பதிவு அலுவலகத்தில் அவர்கள் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை. 2007-ம் ஆண்டு முதல் அவரை விவாகரத்து செய்ய தயாராக இருந்து வருகிறேன். ஆனால் தட்டிக்கழித்தே வந்தார். விவாகரத்து பெறாமல் முகேஷ் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினர் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
சரிதாவின் குற்றச்சாட்டுகளை முகேஷ் மறுத்துள்ளார். அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "சரிதா குற்றச்சாட்டுகள், முற்றிலும் தவறானவை. தேவிகாவை முகேஷ் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு உள்ளார். சரிதாவை சட்டரீதியாக பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார். தேவையான ஆவணங்களை ஒப்படைத்திருக்காவிட்டால் திருமணத்தை அரசு அதிகாரி நடத்தி வைத்திருக்கமாட்டார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.